கோவை பொள்ளாச்சியில், நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் பாரதி, மனைவியை நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.பி.டி. ரோட்டில் தனியாக வசித்து வந்த சுவேதா, வேலைக்கு புறப்பட்டபோது அவரை வழிமறித்த பாரதி, குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். சுவேதா மறுக்கவே வாக்குவாதம் முற்றி, பாரதி கத்தியால் குத்தி கொலை செய்து, சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டுள்ளார். பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில், பாரதி கைது செய்யப்பட்டார்.




