துளசி இலை – 1 கைப்பிடி
ஆவாரம்பூ – 5 கிராம்
சீரகம் – 5 கிராம்
திப்பிலி – 5 கிராம்
இவையனைத்தையும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துச் சாப்பிட, மன உளைச்சல் நீங்கும். இரத்த அழுத்தம் சீராகும்.
மேற்கண்ட குறைபாடுடையோர், எண்ணெய் வறுவல், மாவுப்பதார்த்தங்கள், அசைவ உணவுகள், ஊறுகாய் போன்றவற்றை அறவே நீக்கினால் நோயிலிருந்து முழுமையாய் மீளலாம்.
புகை, போதையினால் தலைவலியின் பாதிப்புக்கு உள்ளானவர்கள் காலை வெறும் வயிற்றில் கீழாநெல்லி, அதிமதுரம், சோம்பு இவற்றைச் சம அளவாய் எடுத்து, விழுதாய் அரைத்துப் பாலுடன் கலந்து சாப்பிட, போதையால் வரும் தலைவலி தீரும். தொடர்ந்து சாப்பிட மது அருந்தும் பழக்கம் குறைய ஆரம்பிக்கும்.




