விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசியதற்காக மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், “ஆணவத்தில் எத்தனை கைது நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் திமுகவினர் அஞ்ச மாட்டார்கள்” என தெரிவித்த அவர், அரசின் நடவடிக்கையை கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை தொடர்பாக அரசியல் கட்சிகள் மத்தியில் தொடர்ந்து கருத்து மோதல் நிலவி வருகிறது.




