மார்ச் மாதத்தில் இருந்து 1.91 லட்சம் புதிய வீடுகள்..!! முதல்வரின் அசத்தல் அறிவிப்பு..!!
தமிழகத்தில் வசிக்க வீடுகள் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு “கலைஞர் கனவு இல்லம் ” என்ற திட்டத்தை தொடங்கியது. மேலும், கடந்த 6 ஆண்டுகளில் “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், ரூ.3000 கோடி முதலீட்டில், 1.91 லட்சம் வீடுகளை கட்டும் பணியானது சுமார் 85% நிறைவடைந்துள்ளதாக ஊரக வளர்ச்சி துறை தகவல் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, இந்த திட்டத்தில் இணைந்த பயனாளிகளுக்கு தலா ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் 1.91லட்சம் வீடுகளை மார்ச் மாதத்திற்குள் வழங்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.



