தவெக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் நேற்று (ஜன., 11) அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பழனி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




