மிகவும் அழகான வரிகள்.. படித்ததில் பிடித்தது..!!

உன் நெஞ்சுக் குழியின் மேல்
துளிர்த்த வியர்வையில்
என் வாசம்…
🌷
உன் இதழ்களை அசைக்கவே
வேண்டாம்
விழிகளை அசைத்துவிடு போதும்…
🌷
உன் நாடியின்
துடிப்பறிவேன்…
தேனீர்கான
நேரமிதுவென…
🌷
என் ஆயுளை
நிர்ணயிக்கும்
பாசக்கயிறு
உன்னிடம்தான் உள்ளது…
🌷
நெருப்பு என்கிறாய்
பனி மழையை
நீ ஒளித்து வைத்துக்கொண்டு…
🌷
என் மொழியை
முழுமையாய் உணர்ந்தவன்
நீ…
எதற்கு அகராதியை தேடுகிறாய்…
🌷
கிழக்கும் மேற்குமாய்
வடக்கும் தெற்குமாய்
அலைமோதுகிறது
நம் காதல்…
🌷
இருவரின் பாதையும்
ஒரு வழிப் பாதைதான்
மீளயியலாது..

Read Previous

மத்திய உளவுத்துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 600 காலியிடங்கள் அறிவிப்பு..!! சம்பளம்: Rs.26,649..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular