முதலீடு செய்ய விருப்பமா?.. மாதம் ரூ.20,000/- வழங்கும் சூப்பர் திட்டம்..!!

இன்றைய கால கட்டத்தில் வங்கி என்பது முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் பணம் டெபாசிட் செய்யவும், தேவைப்படும் போது எடுக்கவும் பயன்படுகிறது. சேமிப்பு மற்றும் முதலீடு போன்றவையும் வங்கிகளில் செய்யப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு மாத வருமானம் வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று அமலில் உள்ளது. 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள தனிநபர்கள் SCSS திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

முதலீட்டாளர்கள் இத்திட்டத்தின் கீழ் ரூ.1000/- முதல் 15 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். SCSS திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். விருப்பப்பட்டால் முதிர்ச்சி தேதிக்குப் பிறகு 3 ஆண்டுகள் வரை இந்த கணக்கை நீட்டிக்க அனுமதி வழங்கப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில், SCSS திட்டத்திற்கு 8.2% வருடாந்திர வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. திட்டத்தின் கீழ் மாத மாதம் 20,000 ரூபாயை பெற ஒரு தனிநபர் 30 லட்சத்தை மொத்தமாக SCSS திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். 8.2% வட்டி விகிதத்தில் இந்த முதலீட்டுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் 61,500 வழங்கப்படும். அப்படியானால் மாதம் தோறும் 20,000 ரூபாய் கிடைக்கும்.

Read Previous

நண்பர்கள் Rocked மணமகள் Shocked..!! ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டுக்கொடுத்த மணப்பெண்..!!

Read Next

Breaking news: டெல்லியின் புதிய முதல்வர் அதிஷி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular