சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை மேம்பாலம் அருகே நேற்றிரவு (செப்.16) முதியவரிடம் செல்போனை பறித்த போதை ஆசாமிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். ஆம்னி பேருந்திற்காக காத்திருந்த முதியவரின் செல்போனை பறித்த போதை ஆசாமி, முதியவரை சரமாரியாக தாக்கினார். தொடர்ந்து அங்கிருந்து தப்ப முயன்ற அவரை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து, போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.




