தற்போது 30 வயது எட்டிய உடனே ஒரு சிலருக்கு மூட்டு வலி ஆரம்பிக்கிறது. முதுகு வலி எலும்பு ஜாயிண்ட் இருக்கும் இடத்திலும் வலி அதே மாதிரி ஏற்பட்டு விடுகிறது
இதற்கு காரணம் நாம் பழைய உணவு பழக்க வழக்கத்தை அப்படியே கைவிட்டு விட்டது தான்
பழைய உணவுகளை போல் இப்பொழுது யாருமே சாப்பிடுவதில்லை ஆனால் இளம் வயதிலேயே நிறைய பேருக்கு மூட்டு வலிகள் ஆரம்பித்து விடுகிறது அதில் நானும் ஒருத்தன்.
சில நாட்கள் மூட்டு வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தேன். என்னுடைய வீட்டில் ஒரு சில நாட்டு மருந்துகள் மற்றும் உணவு பழக்கங்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறேன்.
அதில் ஒன்றுதான் இரவில் பசும்பாலில் பூண்டு கலந்து குடிப்பது இதில் நிறைய கால்சியம் சத்துக்கள் இருப்பதால் எலும்புக்கு சேர வேண்டிய ஈரப்பதத்தை கொடுக்கிறது.
100 கிராம் பால் எடுத்தால் 100 கிராம் தண்ணீர் சேர்க்க வேண்டும் அதில் 5 கிராம் பூண்டை நசுக்கி போட்டு காய்ச்சிய பின் குடிக்கலாம் தொடர்ந்து 21 நாட்கள் குடித்தால் போதும்.
இதை இரவு படுப்பதற்கு முன்னால் குடிக்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் நல்ல பலன் அளிக்கிறது.
பூண்டில் உள்ள மாங்கனிசு என்ற சத்து எலும்பின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. அதில் உள்ள வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. அதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளில் இருக்கும் வலியை போக்க உதவுகிறது.
வயிற்றில் அமில பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு பாலுடன் சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.




