நம் வீட்டில் உள்ள வயதானவர்கள் குறிப்பாக தாத்தா பாட்டி அப்பா அம்மா என அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால் அது மூட்டு வலி தான். இந்த காலகட்டத்தில் 30 வயதுக்கு மேலான பலருக்கும் மூட்டு வலி பிரச்சனை இருக்கிறது. இந்நிலையில் மூட்டு வலி பிரச்சனையை சரி செய்ய இந்த ஐந்து பொருட்கள் மட்டும் போதும். அவை என்னென்ன எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கிராம்பு ரெண்டு
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
துளசி பத்து இலைகள்
இஞ்சி சிறிதளவு
தண்ணீர் தேவையான அளவு
முதலில் அனைத்து தேவையான பொருட்களையும் எடுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதில் பாதி அளவு நன்கு சுண்டி வந்தவுடன் அவற்றை ஒரு டம்ளரில் வடிகட்டி கொள்ள வேண்டும். பின்னர் சுவைக்கு தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதன் மூலம் மூட்டுகளின் இணைப்பில் ஏற்படும் வலிகள் நாளடைவில் குறையும் என கூறப்படுகிறது. கண்டிப்பா இத ட்ரை பண்ணி பாருங்க.




