சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுவிட்டு, நள்ளிரவில் காரில் வீடு திரும்பியுள்ளார்.
டான்சி நகர் மேம்பாலத்தில் அவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 பேர் அந்தப் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
“எங்களை பார்த்து ஏன் ஆபாச சைகை செய்தாய்?” எனக் கேட்டு, கணவர் முன்னிலையில் பெண்ணை தாக்கிவிட்டு 3 பேரும் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தீபக் ராஜா (19), விக்னேஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




