மும்பையிலிருந்து சூரத் சென்ற ரயிலில் டிக்கெட் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நடிகை அந்தரா பானர்ஜி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது விசாரிக்க வந்த RPF வீரரை ரேசர் பிளேடால் தாக்கியதாகவும், பின்னர் தனது ஆடைகளை களைந்து தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து தஹானு ரயில் நிலையத்தில் நடிகையை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




