மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில், “ரீல்ஸ் வெளியிட்டு விஜயின் பிம்பத்தை மட்டுமே கட்டமைத்து வருகின்றனர். தவெக அரசு மக்களுக்காக எந்தப் பணியையும் செய்யவில்லை” என தெரிவித்தார்.
மேலும், “2029 மக்களவைத் தேர்தலில் விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சியில் தவெக ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து டெல்லியில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
ஆர்.பி. உதயகுமாரின் இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.




