கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான புதிய பயனாளிகள் விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களில் பலரும் அரசின் விதிமுறைகளை மீறி பொய்யான தகவல்களை கூறி விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது. ஆதார் கார்டு, செல்போன் எண், வங்கி கணக்கு ஆகியவை மூலம் ஒரு பெண் விண்ணப்பதாரரின் தகுதிகளை அரசு கண்டுபிடித்துவிடும். எனவே, பெண்கள் அஜாக்கிரதையாக நினைத்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.




