வாயில் ஊரும் நீர் கட்டுப்பட நன்னாரி வேரை தூள் செய்து தேனில் கலந்து குடித்தால் வாயில் ஊறும் நீர் கட்டுப்படும்..
வாயில் ஏற்படும் சாதாரண புண் மற்றும் காயங்களுக்கு கடுக்காய் பொடி சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காயங்கள் மீது போட்டு வர சரியாகும், தேங்காய் பாலை தினமும் கொப்பளித்துக் குடித்து வர வாய் உள் ரணம் சரியாகும், வாய் கசப்பு குறைய முருங்கை பூவை பருப்புடன் சமைத்து உண்ண வாய் கசப்பு குறையும், வாய் கசப்பு குறைய புதினா இலையை சாப்பிட வாய் கசப்பு குறையும், எலுமிச்சை இலையை உளுத்தம் பருப்புடன் துவையல் செய்து சாப்பிட்டால் வாய் கசப்பு குறையும், வாய் கசப்பு நீங்க விளாம்பழம் சாப்பிட வேண்டும் வாய் கசப்பை நீக்க எலுமிச்சை சாற்றில் இஞ்சி ஊறவைத்து அதை மென்று சாப்பிட வாய் கசப்பு நீங்கும் வில்வ இலையை தினமும் காலையில் மென்று தின்று வர வாய் திக்குதல் சரியாகும் அல்சர் வயிற்றுப்புண் நோயாளிகளுக்கு வாய் நாற்றம் இருக்கும் இவர்கள் மணத்தக்காளி கீரை சீரகம் வெந்தயம் சேர்த்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வேக வைத்து குடித்தால் அல்சர் சரியாகும், எல்லாவற்றிற்கும் மேலாக குடலை சுத்தமாக வைத்துக் கொண்டால் மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொண்டால் வாய் துர்நாற்றம் நீங்கும் தினமும் நான்கு வில்வ இலைகளை மென்று விழுங்க வாய் துர்நாற்றம் நீங்கும், நார்த்தம் பழந்தோலை மென்று பத்து நிமிடங்கள் வைத்திருந்து துப்பி விட வாய்ப்பு துர்நாற்றம் அகலம், பன்னீரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்…!!




