வாயில் வைத்ததும் கரைந்து ஓடும் வாழைப்பழம் அல்வா..!!

Oplus_131072

வாயில் வைத்ததும் கரைந்து ஓடும் வாழைப்பழம் அல்வா….

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 5 முதல் 6
சர்க்கரை – 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி
நெய் – மூன்று தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 15

செய்முறை

முதலில் நன்கு பழத்த வாழைப்பழங்களை தோள்களை நீங்கி பொடியாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து முந்திரி பருப்புகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும். மீதமுள்ள நெய்யில் வைத்து இருக்கும் வாழைப் பழத்தை சேர்த்து கிளற வேண்டும்.

மிதமான தீயில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தொடர்ந்து கிளற வேண்டும். தேவைப்படும் பொழுது நெய் சேர்த்து கிளறினால் சுவை கூடுதலாக இருக்கும். பத்து நிமிடங்கள் கழித்து இரண்டு தேக்கரண்டி சக்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் கலந்து கொடுக்க வேண்டும்.

இறுதியாக ஒரு தேக்கரண்டி நெய், வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து இறக்கினால் சுவையான வாழைப்பழ அல்வா தயார்.

Read Previous

திருமணம் முடிந்த பின் முதலிரவில் பாலும், பழமும் கொடுப்பது எதற்காக தெரியுமா..??

Read Next

தினமும் 3 நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்..!! தோப்புக்கரணம் பற்றிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular