இன்று செப்டம்பர் 7 உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடிய நிலையில் இஸ்லாமிய மக்களும் உற்சாகமாக விநாயக சதுர்த்தி கொண்டாடி வருகின்றனர்…
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் உற்சாகமாக கொண்டாடினார் பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு அருகில் விநாயகர் சிலுடன் ஊர்வலமாக சென்று அவர்களை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர், மேலும் மதத்தின் பெயரில் பல இடங்களில் சச்சரவுகள் ஏற்படும் நிலையில் சாதி மத பேதமின்றி ஒரு தாய் மக்களாய் இஸ்லாமியர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியது நிகழ்ச்சியை ஏற்படுத்தியது, மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முஸ்லிம் பாகுபாடு இன்றி அனைவரும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிவரும் இந்த நிலையை பார்ப்பதற்கு மக்கள் அனைவரும் வரவேற்றனர் மேலும் இந்த புகைப்படங்கள் இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்து பெரும் வரவேற்பையும் உற்சாகத்தையும் தந்துள்ளது, இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு மற்றும் நண்பர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தும் வருகின்றனர், இதனை பார்ப்பதற்கு நாட்டில் அமைதி நிலவிய சகோதரத்துவம் பிறந்ததாக பலரும் கூறுகின்றனர்..!!



