வியாசர்பாடியில் 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஜெயராம் (61) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நேற்று, சிறுமி தன் வீட்டின் மாடியில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருந்த ஜெயராம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் செம்பியம் மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.




