வியாபார தோஷம் நீங்க எளிய பரிகாரம்..!!

 

 

தொழில் செய்யும் இடத்தில் ஏற்படும் பிரச்சனை, பணப்பிரச்சனைகள் நீங்க எளிய பரிகாரம் இது.

சிலருக்கு என்ன வியாபாரம் செய்தாலும் விருத்தி அடையாதபடி தோஷம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினசரி காலை குளித்து விட்டு மகாலட்சுமி படத்திற்கு முன்பு பால், தேன், ஏலக்காய், கிஸ்மிஸ் பழம், முந்திரிப் பருப்பு ஆகிய ஐந்தையும் கலந்து, ஒரு புதிய கிண்ணத்தில் வைத்து மற்றொரு கிண்ணத்தில் பஞ்சாமிர்தத்தை படைத்து வழிபட வேண்டும்.

அப்போது ஐந்து முகம் கொண்ட வெள்ளி விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு சிறிது பஞ்சாமிர்தத்தை எடுத்துச்சென்று உங்கள் வியாபார தலத்தில் உள்ள முக்கிய வேலையாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு தினசரி செய்து வந்தால் தொழிலில் நஷ்டம் வராது. அப்படி செய்ய இயலாவிட்டால், நவதானியங்களை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து உங்கள் கடைவாசலில் கட்டுங்கள். கல்லாவிலும் போட்டு வையுங்கள். உங்கள் வியாபாரம் பெருகும்…..

 

Read Previous

அனைத்து தோஷங்களையும் நீக்கும் மயில் இறகு..!!

Read Next

கனவில் கடவுள் வந்தால் என்ன பலன்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular