
வரும் 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி என்கிற இலக்கை அடைவதற்கு கோவையின் 10 தொகுதிகளும் உத்தரவாதம் அளித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்…
கடந்த 5,6 தேதிகளில் கோவைக்கு சென்று கள ஆய்வை துவங்கினேன் மற்ற மாவட்டங்களிலும் தொடர இருக்கிறேன் கள ஆய்வுப் பணிகளை மாவட்டங்களில் நிறைவு செய்ததும் கட்சிப் பணிகளையும் ஆய்வு செய்வேன். மேற்கு மண்டல திமுகவில் ஓட்டை விழுந்து விட்டது போல் அரசியல் களத்தில் சித்தரிக்கப்படுகிறது, இதற்கு மாறாக கொள்கை உரமிக்க மூத்த நிர்வாகிகளையும் இலட்சிய நோக்கத்துடன் செயல்படும் இளைய பட்டாளத்தையும் கொண்ட திமுகவின் கோட்டையாக மேற்கு மண்டலம் இருக்கிறது இதை கோவையில் தரை இறங்கியதுமே உணர முடிந்தது, விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து கள ஆய்வின் முதல் நிகழ்வான “எல்காட்” தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறக்க சென்றேன், வழியில் ஆறு கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம் மக்கள் புன்னகைத்த கையசைத்து அடுத்தடுத்தும் உங்க ஆட்சி தான் என வாழ்த்தி மகிழ்ந்தனர், திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காலத்திற்கு ஏற்ற வளர்ச்சி கட்டமைப்புகளை உருவாக்குவது வழக்கம். கோவை மாவட்ட நிர்வாகிகளிடம் புது உத்வேகம் உருவாகி இருப்பதை உணர முடிந்தது, வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் இந்த இலக்கை அடைய கோவையின் 10 தொகுதிகளிலும் உத்திரவாதம் அளித்திருக்கின்றனர், மக்கள் பணியை லட்சியமாக கொண்டிருப்பதால் மறுபடியும் திமுக ஆட்சி அமையும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவோம் என்று உறுதியை வழங்கி வரும் 9, 10 தேதியில் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறேன். கோவையில் துவங்கினேன் தமிழக முழுவதும் தொடர்ந்து வருவேன் என்று கூறியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்..!!