ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமான ரியல்மி, ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு வாரம் வரை பேட்டரி நீடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வரும் ஜூன் 29-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்காக மக்கள் அதிக நேரம் செல்போன்களை பயன்படுத்துவதால், நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும் பேட்டரிகளுக்கான தேவையை ஈடுகட்ட இந்நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் விலை ரூ.25,000 முதல் ரூ.30,000-க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




