குடிப்பழக்கத்தை ஒரே வாரத்தில் நிறுத்த வைக்கும் நாட்டு வைத்திய கசாயம்.
நம் நாட்டில் பலர் குடிக்கு அடிமையாகி கொண்டிருக்கும் இந்த வேளையிலேயே ஒரே வாரத்தில் குடியை நிறுத்துவதற்கான அதிசயமான நாட்டு கசாயம் ஒன்று உள்ளது.
குடி குடியை கெடுக்கும் என்ற பழமொழி பல குடும்பங்களில் உண்மையாகவே இருக்கிறது. இந்த குடிப்பழக்கத்தால் பல குடும்பங்கள் இருந்த இடம் கூட தெரியாமல் போய்விடுகிறது.
குடிப்பழத்திற்கு அடிமையானவர்கள் ஒரே வாரத்தில் திருத்தத்திற்கு இந்த கசாயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் உள்ள ஒருவர் குடிப்பழத்திற்கு அடிமையானாலே அந்த வீட்டில் சண்டை சச்சரவுகள் குழப்பங்கள் என குடும்பத்தில் ஆயிரம் பிரச்சனைகள் ஏற்படும். இந்த நவீன காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என்று அனைவருமே இந்த குடிப்பழத்திற்கு அடிமையாகி வருகின்றனர். குடிப்பழக்கத்தை நிறுத்த இந்த நவீன காலகட்டத்தில் பலவகையான இங்கிலீஷ் மருந்துகள் இருந்தாலும் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இயற்கை ரீதியாக நாட்டு மருத்துவ முறையில் ஒரே வாரத்தில் குடிப்பழக்கத்தை நிப்பாட்ட இயற்கையான நாட்டு வைத்திய கசாயம் ஒன்று உள்ளது.
குடிப்பழக்கத்தை
நிறுத்தும்நாட்டுவைத்தியகசாயம்செய்யதேவையானபொருட்கள்
வில்வ இலை, கொத்தமல்லி விதைகள், ஏலக்காய், பனைவெல்லம், எலுமிச்சை சாறு
செய்முறை
உரலில் இரண்டு வில்வ இலைகள், கொத்தமல்லி விதைகள், ஏலக்காய் சேர்த்து நன்றாக இடித்து பொடியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பனைவெல்லம் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைத்த பொடியை சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும். பின்னர் இதில் எலுமிச்சை சாறு சேர்த்து ஆற வைத்து தினமும் குடித்து வந்தால் குடிப்பழக்கத்தை ஒரே வாரத்தில் எளிதாக நிறுத்தலாம்.




