ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கட்டுப்பட இதை மட்டும் செய்யுங்க போதும்..!!
ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கட்டுப்பட வீட்டிலேயே இயற்கையான முறையில் மருத்துவம் செய்யலாம் அது எப்படி என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
முதலில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கட்டுப்பட தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
ஆவாரம் பூ 50 கிராம்
தாமரைப்பூ 50 கிராம்
ரோஜாப்பூ 50 கிராம்
செம்பருத்திப்பூ 50 கிராம்
சுக்கு 10 கிராம்
மிளகு 10 கிராம்
திப்பிலி 10 கிராம்
ஏலக்காய் 10 கிராம்
இவற்றையெல்லாம் நன்கு காயவைத்து ஒன்றிடண்டாய் பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதில் 10 கிராம் எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதிகாலை மற்றும் மாலை இருவேளையும் அருந்தி வர ரத்த அழுத்தம் போன்ற குறைபாடுகள் சரியாகி இதய நோய்கள் நீங்கும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வர வைக்க இது மிகவும் உதவுகிறது அது மட்டுமின்றி நல்ல தூக்கம் வரும்.




