முல்லைப் பூ..!! முல்லை பூவில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
பூ என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பெண்கள் அனைவருக்கும் பூ என்பது மிகவும் பிடிக்கும். அதுவும் ஒரு சிலருக்கு ஒவ்வொரு வகையான பூக்கள் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் ஒரு சிலருக்கும் முல்லை பூதான் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் முல்லை பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். முல்லை பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.
முல்லைப் பூவின் சாறு பிழிந்து மூன்று துளி மூக்கில் விட தலைவலி தீருமாம், முல்லை பூவின் சாற்றினை இரண்டு அல்லது 4 துளிவீதம் கண்ணில் விட்டு வர கண்பார்வை குறைவு குணமாகும். அதுமட்டுமின்றி உடலில் சொறி மற்றும் சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும் எனவே முல்லை பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும் ஒரு நாள் விட்டு ஒரு நாளாக மூன்று நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.




