ஐபிஎல் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று 7:30 மணியளவில் லக்னோ அணிக்கும் டெல்லி அணிக்கும் லக்னோவில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற டெல்லி, முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது.
முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 159க்கு 6 விக்கெட்டுகளை விட்டு தனது பேட்டிங்கை முடித்தது. இதில், மார்க்ரம் 52 ரங்கள் எடுத்து அசத்தினார். மற்ற வீரர்கள் தனது பங்களிப்பை வழங்கியதால் இந்த இலக்கை வைக்க முடிந்தது. பௌலிங்கில் டெல்லி அணியின் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய டெல்லி அணி இதிலும் சிறப்பாக தான் விளையாடியது. கே எல் ராகுல் 57 ரன்கள் எடுத்தார். பௌலிங்கிலும் லக்னோ அணி சுமாராக தான் விளையாடியது. இறுதியில் டெல்லி 17.5 ஓவரில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.




