நம் அனைவருக்கும் சப்பாத்தி என்றால் நிச்சயமாக மிகவும் பிடிக்கும். அதை அடிக்கடி காலையிலும் இரவிலும் சாப்பிடுவது வழக்கமாகவும் பல வீடுகளில் இருக்கும். இது நமது உடலின் நலனுக்கு முக்கியமான உணவாக கருதப்படுகிறது. ஆனால் இதில் எண்ணெய் ஊற்றி சாப்பிட நிறைய பேர் விரும்ப மாட்டார்கள். காரணம் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு இருக்கும் நோய்கள்.
ஆனால் என்னை தேய்க்கவில்லை என்றால் சப்பாத்தி மாவு பிசையும் போது கைகளில் ஒட்டி வரும். அப்படி ஒட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம். ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடாமல் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். அதில் சிறிது உப்பு போட்டு இறக்கிவிட்டு தேவையான அளவு சப்பாத்தி மாவை அதில் சேர்க்கவும்.
அதை ஒரு ஸ்பூனை வைத்து கலந்து விடவும். ஐந்து நிமிடம் கழித்து வேறொரு பாத்திரத்தை எடுத்து சிறிதளவு கூட தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை அந்த பாத்திரத்தில் கொட்டி கைகளை வைத்து நன்றாகப் பிசைந்தால் மாவு ஒட்டாமல் வரும். இப்படி செய்வதன் மூலம் என்னை உபயோகிப்பதையும் நாம் சுலபமாக தவிர்த்து விட முடியும்.




