பழைய சப்பாத்தியில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா..?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!
பழைய சப்பாத்தியில் தான் அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறது. இந்த நார்ச்சத்து ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான ஒன்று. ஆரோக்கியமான வாழ்வுக்கு மட்டுமின்றி எளிதாக ஜீரணிப்பதற்கு குடலுக்கு மிகவும் நல்லது. உடனடியாக செய்த சப்பாத்தியில் இருப்பதைவிட பழைய சப்பாத்தியில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். நேரம் ஆக ஆக சப்பாத்திகள் இருக்கும் ஸ்டார்ச் உடைந்து நார்ச்சத்தாக மாறிவிடும். எனவே நார்ச்சத்து தேவைக்கு பழைய சப்பாத்தி ஏற்றது. சப்பாத்தியை செய்த உடனே சாப்பிட்டால் அதில் அதிக அளவில் கலோரி இருக்கும். ஆனால் நேரம் ஆக ஆக சப்பாத்தியில் இருக்கும் ஸ்டார்ச் உடைந்து கலோரியை குறைத்து விடும். இதனால் தான் எடை குறைவாக வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு பழைய சப்பாத்தி ஏற்றது என்று கூறுவர். பழைய சப்பாத்தியை குளிர்ந்த பாலுடன் சாப்பிடுவது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உதவும். பழைய சப்பாத்தியை குளிர்ந்த பாலில் ஊற வைத்து பத்து நிமிடங்கள் கழித்து சாப்பிட வேண்டும் .இதை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம் இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.




