நாளை (ஆக.27) விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்த தினத்தை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க தயாராகி வருகின்றனர். இதையடுத்து இன்று (ஆக.26) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) வரையில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுமார் 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.




