தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்குளம் கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் சிவபூபதி (45) கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், தனது இரு மகன்களையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனமுடைந்து இந்த கொடூர முடிவை எடுத்ததாக கடிதம் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து, இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




