Oplus_131072
பொதுவாக சமையலறை மற்றும் வாஷ் பேசின்களில் ஏற்படும் சிங்க் அடைப்பு, துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் அனைவருக்கும் தலைவலியாக இருக்கும்.
இதற்காக உடனே கெமிக்கல் கிளீனர் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள் அனுபவம் வாய்ந்த பிளம்பர்கள். வீட்டிலேயே எளிதாக கிடைக்கும் பொருட்களை வைத்து பாதுகாப்பாகவும் குறைந்த செலவிலும் சிங்க் அடைப்பை சரி செய்ய முடியும்.
முதலில், வெந்நீர் மற்றும் சோப்பு முறை மிகவும் பயனுள்ளதாகும். சிங்கில் நீர் மெதுவாக இறங்கினால் அல்லது துர்நாற்றம் வந்தால், ஒரு பெரிய பாத்திரம் நிறைய சூடான நீரை சிங்கில் மெதுவாக ஊற்றுங்கள். அதனுடன் சிறிதளவு துணி துவைக்கும் திரவம் அல்லது பாத்திரம் கழுவும் லிக்விட் சேர்த்தால், குழாயில் தேங்கியுள்ள எண்ணெய் பிசுக்கு, சோப்பு கழிவு போன்றவை கரைந்து வெளியேறும். இதனால் அடைப்பு நீங்கி சிங்க் சுத்தமாக இருக்கும்.
அடுத்ததாக, பேக்கிங் சோடா மற்றும் உப்பு கலவை நல்ல தீர்வாக இருக்கும். அரை கப் பேக்கிங் சோடாவுடன் அரை கப் உப்பை கலந்து சிங்க் ஹோலில் ஊற்றி, அதன் மேல் வெந்நீரை ஊற்றினால், குழாயின் உள்ளே படிந்த அழுக்குகள் மெதுவாக தளர்ந்து வெளியேறும். இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்தால் அடைப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
மேலும், வினிகர் (சாராயம்) பயன்படுத்துவதும் பயனளிக்கும். பேக்கிங் சோடாவை சிங்கில் ஊற்றிய பிறகு, அதன்மேல் வினிகரை சேர்த்தால் குமிழ்கள் உருவாகும். இந்த ரசாயன வினை குழாயின் உள்ளே உள்ள அழுக்குகளை சிதைக்க உதவும். 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து சூடான நீரை ஊற்றினால் சிங்க் சுத்தமாகும்.
இதனுடன், பிளஞ்சர் பயன்பாடும் எளிய தீர்வாகும். சிங்கில் சிறிது நீர் தேங்கி இருக்கும் நிலையில் பிளஞ்சரை வைத்து மேலே கீழே அழுத்தினால், உள்ளே சிக்கிய கழிவுகள் தளர்ந்து வெளியேறும். இது எந்த கெமிக்கலும் இல்லாமல் உடனடி தீர்வு தரும் வழி.
பிளம்பர்கள் கூறுவது போல, சிங்கில் அதிக எண்ணெய், உணவுக் கழிவுகள், முடி போன்றவற்றை நேரடியாக விடாமல் கவனித்தால் அடைப்பு பிரச்சனையே வராது. வாரத்திற்கு ஒருமுறை வெந்நீர் ஊற்றும் பழக்கம் வைத்துக் கொண்டால், சிங்க் நீண்ட நாட்கள் சுத்தமாகவும் துர்நாற்றமின்றியும் இருக்கும்.




