கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த மாணவிகளை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 16 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு அணைத்து தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.




