தோலில் உள்ள தேமல் படி படியாக மறைய சில பயனுள்ள இயற்கை வழிமுறைகள்..!!

Oplus_131072

 

1.அருகம்புல், கஸ்தூரிமஞ்சள், மருதோன்றி போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் விரைவாக குணமாகும்.

2.நாயுருவி இலை சாறை தடவி வந்தால் தேமல், படை குணமாகும். இப்படியான நாயுருவி இலையானது எளிதாக கிரமாப்புறங்களில் கிடைக்க கூடியது.

3.கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்மற்ற்கு தேய்த்து குளித்து வரவும். எலுமிச்சை பழச்சாறு தேமல் உள்ள இடங்களில் தேய்த்தால் தேமல் மறையும்.

4.நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து குடித்தால் தேமல் குறையும்.

5.எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வந்தால் தேமல் குறையும்.

6.மஞ்சள் இடித்து நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும். துளசி இலை, வெற்றியைலை எடுத்து அரைத்து தேமல் மேல் பூசினால் தேமல் நீங்கும்.

Read Previous

வாழை குடிநீர்..!! இதன் மருத்துவ பயன் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Read Next

மனதை ஒருநிலைப்படுத்தி பல்துலக்க கூறும் சித்த மருத்துவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular