காங்கிரசுக்கு 25 தொகுதிகள் வழங்கப்படும் என்பதில் உடன்பாடு இல்லை என மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடெங்கர் தெரிவித்திருந்தார். இதனால் திமுக கூட்டணியில் இருந்து காங்., விலகலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், K. C. வேணுகோபால் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தியதில் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இது தவெகவினருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.



