தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பெண்களுக்கு எதிரான கொடுங்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து, விரைவாக விசாரணை நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். மேலும், குற்றங்கள் நடவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுப் பணிகளைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.




