கோடீஸ்வர யோகத்தை கொட்டித் தரக்கூடிய வசம்பை உங்கள் தலையில் இப்படி வைத்து பாருங்கள்..!!

Oplus_131072

 

உங்களின்_தலையெழுத்தே_மாறும்.
பொதுவாகவே வசம்புக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கின்றது. இதற்கு காரணம், இந்த வசம்பில் எந்த ஒரு கெட்ட சக்தியும் அண்டாமல் இருப்பது தான். இந்த வசம்பை நம்முடைய முன்னேற்றத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.’பரிகாரம் செய்வதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!’ என்று சொல்லுபவர்கள், இந்த வசம்பில் ஒரு சிறு துண்டை வாங்கி உங்கள் பர்ஸில் வைத்துக்கொண்டால் கூட, உங்கள் பர்ஸில் இருக்கும் பணத்திற்கு பிரச்சினை வராது. பர்ஸில் இருக்கும் பணம், செலவு ஆனாலும் திரும்பவும் வருமானம் சீக்கிரமே வரும்.
சரி. நீங்கள் பஸ்ஸில் வைப்பதற்கு வசம்பை வாங்கினாலும், பரிகாரம் செய்வதற்கு வசம்பை வாங்கினாலும் சரி. முதலில் பேரம் பேசாதீர்கள். பேரம் பேசாமல் கேட்கும் விலையை கொடுத்து விட்டு, வசம்பை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை உங்களுடைய பூஜை அறையில் தான் வைக்க வேண்டும். கட்டாயம் தீட்டு படக்கூடாது.
காலையில் நீங்கள் எழுந்து குளித்து முடித்துவிட்டு, ஒரு மண் அகல் விளக்கில், சிறிது பசு நெய் ஊற்றி, தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஏற்றி வைத்திருக்கும் தீபச்சுடரில், இந்த வசம்பை காட்டினாலே, லேசாக அந்த வசம்பு கருப்பு நிறமாக மாறும். அதன் பின்பு அந்த விளக்கில் இருக்கும் நெய்யை சிறிதளவு, உங்கள் கை மோதிர விரலில் தொட்டு, வசம்பின் இருக்கும் கரு நிறத்தை தொட்டால், கருப்பு விரலில் ஒட்டிக் கொள்ளும். லேசாக ஒட்டியிருக்கும் அந்த கருப்பு மையை உங்களது உச்சந்தலையில் லேசாக வைத்துக் கொள்ள வேண்டும். நெற்றியிலும் லேசாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்படி இந்த பரிகாரத்தை செய்து விட்டு, நீங்கள் எந்த ஒரு செயலுக்கு சென்றாலும், அதில் பல மடங்கு அதிகமான வெற்றி கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. தொழில் தொடங்குவதாக இருந்தாலும் சரி. கடனை வசூலிக்க சென்றாலும் சரி. எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி சுலபமாக ஒரு தீர்வு கிடைக்கும். ஒரு நல்ல காரியத்திற்கு கிளம்பும் போது கூட, இப்படி இந்த மையை இட்டுக் கொண்டு கிளம்பும் பட்சத்தில், அந்த காரியம் சுபமாக முடிந்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை.பல பெரிய
பெரிய பணக்காரர்கள், தொழில் வசியம், தன வசியம், முக வசியம், ஜன வசியம் செய்வது இந்த வசம்பை வைத்துத்தான். வசதி படைத்தவர்கள் பெரிய பெரிய சாஸ்திரம் தெரிந்தவர்களை வைத்து, செய்யக்கூடிய பலர் வசிய வித்தைகள், மூலம் கிடைக்கப்படும் அதே சக்தி, இந்த வசம்பு மையை நெற்றியில் இட்டுக் கொண்டால் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.தினம்தோறும்
இப்படி தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் நீங்கள் எல்லோராலும் விரும்பத்தக்க மனிதராக மாறி விடுவீர்கள். யாருக்காவது உதவி என்று தேவைப்பட்டால் கூட, உங்களை வந்து அழைப்பார்கள். நீங்கள் உடன் சென்றால், அந்த காரியம் வெற்றி அடைகிறது என்ற நம்பிக்கையும் உண்டாகும் அளவிற்கு உங்களது வசீகரம் மாறும்.இப்படி
எல்லாம் சொன்னால் கண்டிப்பா நம்பமாட்டீர்கள். 48 நாட்கள் செய்து பாருங்கள்! அடுத்தவர்கள் உங்களிடம் பழகும் முறையும் மாறிவிடும். நீங்கள் அடுத்தவர்களிடம் பழகும் முறையும் மாறிவிடும். தொட்டதெல்லாம் வெற்றி அடைந்து, பணவரவு அதிகரித்துக் கொண்டே வந்தால் யாருக்குத்தான் அழகு கூடாது? இந்த வசம்பை இப்படி நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் எந்த ஒரு பிரச்சனையும் வராது. குழந்தைகளுக்குக்கூட சிறுவயதில், மைக்கு பதிலாக, இந்த வசந்த குழைத்து நெற்றியில் வைப்பார்கள்.

Read Previous

இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் அருகில் இறந்தவர்களின் ஆன்மா இருப்பது உறுதி..!!

Read Next

தேங்காய்க்குள் மறைந்திருக்கும் சகுனம்..!! தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் செல்வம் சேரும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular