கேரளம் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. வி.டி.சதீஷன் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், வருகின்ற ஜூன் 15 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் முதற்கட்டமாக நகரப் பேருந்துகளில் செயல்படுத்தப்படும். மேலும், வயதானவர்களுக்காக தனித் துறை ஒதுக்கப்படும் என்றும், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி சமையல் பணியாளர்களின் மாத ஊதியம் உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.




