“ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸில் நடைபெறும் போட்டி ரோஹித் சர்மாவின் கடைசி போட்டி என்ற எந்தவிதமான விவாதமும் நடைபெறவில்லை என்பதை உறுதியாக தெரிவிக்க விரும்புகிறேன். ரோஹித் இந்திய ஒருநாள் அணியின் முக்கிய வீரர். அவர் அணியின் திட்டத்தில் இருக்கும் வரை நாட்டிற்காக தொடர்ந்து விளையாடுவார். லார்ட்ஸில் நடைபெறும் ஒருநாள் போட்டி அவரது கடைசி போட்டி அல்ல,” என்று பிசிசிஐ செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்மூலம், ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்த சமூக வலைதள வதந்திகளுக்கு பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.




