பணியாளர்கள் தங்களது PF கணக்கில் இருந்து பணத்தை முன்பணமாக பெறுவது தொடர்பாக புதிய காலக்கெடு மற்றும் விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, பணியில் இருக்கும் ஊழியர்கள் அவசர தேவைகளுக்காக தங்களது PF தொகையில் அதிகபட்சமாக 75% வரை, ஆண்டுக்கு இரண்டு முறை முன்பணமாக பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையை விட்டு விலகியவர்கள் முழுமையான PF தொகையைப் பெறுவதற்கு 12 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்றும், EPS ஓய்வூதியப் பலன்களைப் பெற நிபந்தனைகளுக்கு உட்பட்டு 36 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் PF பணத்தை முன்கூட்டியே பெறுவதற்கான நடைமுறையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ஊழியர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப விதிமுறைகளை அறிந்து விண்ணப்பிப்பது அவசியம்.




