லேப்டாப் சார்ஜர் போடும்போது மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு!

 

 

திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பத்தில் லேப்டாப் சார்ஜர் போடும்போது மின்சாரம் தாக்கி 11-ம் வகுப்பு மாணவர் சீனிவாசன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று மாணவரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மாணவரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மின் சாதனங்களை பயன்படுத்தும்போது வயர்கள், சார்ஜர்கள் மற்றும் மின் இணைப்புகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து, பாதுகாப்புடன் கையாள வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Read Previous

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு புதிய உச்சம்!

Read Next

“முதலமைச்சர் விஜய் தூங்குகிறாரா?” – திமுக அயலக அணி கடும் விமர்சனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular