டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்!

 

 

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஆக.22) சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

 

இந்த முறைகேடு தொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதனை ஏற்று செந்தில் பாலாஜி இன்று ஆஜராகியுள்ளார்.

 

அவரிடம் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

செல்போன் உற்பத்திக்கு ரூ.62,500 கோடி திட்டம்! 60 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்ப்பு!

Read Next

மாணவர் போராட்ட விவகாரம்: தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular