சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு மற்றும் மானிய சேவைகளுக்கான eKYC ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகளைத் தடுத்து, தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே மானியச் சேவைகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் eKYC சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை eKYC முடிக்காத நுகர்வோர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எரிவாயு விநியோகஸ்தர்களிடம் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து உடனடியாக சரிபார்ப்பை முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




