சென்னை – பெங்களூரு சாலையில் பயங்கர விபத்து: 25-க்கும் மேற்பட்டோர் காயம்!
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் தனியார் தொழிற்சாலை பேருந்து, முன்னால் சென்ற கனரக லாரி மீது பயங்கரமாக மோதியது. சுமார் நள்ளிரவு 1 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் பெண்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.




