தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 4
எலுமிச்சை சாரு – சிறிதளவு
கலர் பவுடர் – 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
கருவேப்பிலை – 2 கொத்து
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் போட்டு நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துகொள்ளவும்.
பின் சிக்கனுடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்.மிளகு தூள்,கரம் மசாலா .இஞ்சி பூண்டு விழுது,சேர்த்து அத்துடன் , பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.
2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி வைக்கவும்.
வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்,
சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் ரெடி




