இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களின் ஊதியத்தில் ஒரு பங்கை பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அவ்வாறு முதலீடு செய்யும் போது அந்த திட்டத்தை பற்றி முழுமையாக நாம் அறிந்திருப்பது அவசியமாகும். அந்த வகையில், நீங்கள் SBI வங்கியில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், இத்திட்டத்தில் என்னென்னா பயன்கள் உள்ளன? எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது? குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு? சந்தை அபாயம் உள்ளதா? என அனைத்து விவரங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக, மற்ற வங்கிகளை காட்டிலும் SBI வங்கியானது FD மற்றும் SIP ஆகிய திட்டங்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்குகிறது.
1.நாம் முதலீடு செய்யும் SBI-ன் SIP திட்டத்தில் சந்தை அபாயங்கள் குறைவாக உள்ளன. மேலும், நீண்ட காலத்திற்கு நல்ல வருவாயை அள்ளித்தரும் திட்டமாக உள்ளது.
2. இப்போது நீங்கள் முதலீடு செய்ய தொடங்குகின்றீர்கள் என்றால், முதலில் எவ்வளவு காலம் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், SIP திட்டத்தில் மாதந்தோறும் எவ்வளவு தொகை செலுத்த போகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
3. ஈஃவிட்டி ஃ பண்டுகளுக்கு 1 வருடத்திற்கு 15% வரியும், அதற்கு பின்னர் 10% வரியும் உங்களுக்கு வழங்கப்படும்.
4. மேலும், நீங்கள் தொடர்ந்து SIP செயல்திறனை கண்காணிக்க வேண்டும்.
5. உதாரணமாக, இப்போது நீங்கள் 15,000 ரூபாயை மாதத்திற்கு ஒரு முறை என்ற கணக்கில் 15 வருடங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்கிறீர்கள் என்றால், அது 15 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு மொத்தமாக ரூ. 1 கோடி மேல் கிடைக்கும்.



