அரிசி, பருப்புகளில் வண்டு, புழு பிடிக்கின்றதா?.. வராமல் தடுக்க சூப்பர் வழி இதோ..!!

நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் மசாலா பொருட்கள், அரிசி, பருப்பு இவற்றில் சிறுசிறு பூச்சிகள், புழுக்கள் வரும் நிலையில், இவற்றினை எவ்வாறு விரட்டுவது என்பதை தெரிந்து கொள்வோம்.

தற்போது விலைவாசிகள் தாறுமாறாக எகிறி வரும் நிலையில், மக்கள் அளவிற்கு அதிகமாக வாங்கி வைத்துக்கொள்ள நினைக்கின்றனர். அவ்வாறு வைக்கும் போது அதில் புழு மற்றும் வண்டுகள் வந்துவிடுகின்றது.

இதனால் வாங்கி வைத்திருக்கும் பொருட்கள் சில நேரங்களில் வீணாகவும் செய்கின்றது. இதற்கான நிரந்தர வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.

புழு வண்டு பிடிக்காமல் இருக்க:

வேப்பிலையை உணவுப்பொருட்களை பாதுகாக்க பயன்படுத்தி கொள்ளலாம், வேப்பிலையை நிழலில் காயவைத்து, அரிசி, பருப்பு போட்டு வைத்திருக்கும் கலன்களில் வேப்பிலை சருகை போட்டு வைத்தால் தீர்வு கிடைக்கும்.

அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் மிளகாய் வத்தல் இவற்றினை அரிசி பருப்பு உள்ள கலன்களில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராமல் இருக்கும்.

மணமூட்டியாகவும், சுவையூட்டியாகவும் பயன்படும் பிரிஞ்சி இலைகள் பூச்சிகளுக்கு எதிரியாக இருக்குமாம். ஆகவே வீட்டில் அரிசி, பருப்பு போன்றவற்றை சேமித்து வைக்கும் கலன்களில் 4, 5 பிரிஞ்சி இலைகளை போட்டு வைத்தால் பூச்சி மற்றும் புழு போன்றவற்றை வராமல் தடுக்க முடியும்.

Read Previous

பெண்களுக்கு முகத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா?..

Read Next

டிகிரி போதும்.. LIC ஆணையத்தில் வேலை..!! உடனே அப்ளை செய்யவும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular