
காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியாவில் இருக்கும் பல பேர் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் போர் பதற்றம் நிலவி வந்த சூழலில் நிறைய பேர் போருக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வளர்த்து வரும் காரணத்தினால் இந்தியா பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்து வந்தது.
ஆனால் இதற்கு பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இந்தியா குறிப்பாக ஒன்பது முகாம்களில் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். காரணம் அந்த தாக்குதலில் எந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் பாகிஸ்தானின் பொதுமக்களும் பாதிப்படையவில்லை. வெறும் தீவிரவாதிகள் மட்டுமே பாதிப்படைந்திருக்கும் இந்த வேலையில் ஒரு சிலர் இந்தியாவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இப்படி கூறும் நபர்களை நாம் தேச துரோகிகள் என்று தான் கூற வேண்டும். காரணம் தீவிரவாதிகளை அளிப்பது யாராயினும் அது சரியே. சொந்த நாட்டில் இருக்கும் தீவிரவாதிகளை அளிக்காத பாகிஸ்தான் வீழ்ச்சி அடைய போவதும் உறுதி தான். இரண்டு நாட்டு மக்கள் பாதிப்படைந்தால் மட்டுமே அது போர் எனப்படும். ஆனால் தீவிரவாதிகளை நாம் தாக்குவது போராகாது. மேலும் இந்தியாவும் இதில் குறிப்பாக தான் இருக்கிறது. போர் என்று ஒன்று வந்தால் இந்தியாவின் கை ஓங்கும் என்று உலக நாடுகள் முதற்கொண்டு அனைவருக்கும் தெரியும்.
ஆனால் பாகிஸ்தானின் குடிமக்களின் நலனுக்காக இந்தியா போரை ஆரம்பிக்காமல் வெறும் தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்து தாக்கி வருகிறது. பாகிஸ்தான் தான் போரை நடத்தியே ஆக வேண்டும் என்று திட்டமிட்டு காத்திருக்கிறது. மேலும் தீவிரவாதிகளை இந்தியா அழித்து வரும் இந்த சூழலில் யாரேனும் இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுத்தால் அவர்களும் தீவிரவாதிகள் தான் என்று நிர்ணயிக்க வேண்டும். மேலும் இந்தியா மட்டுமில்லாமல் பயங்கரவாதத்திற்கு எதிராக பல உலக நாடுகள் இந்தியாவுடன் கைகோர்த்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.