ஒரு தந்தையும் மகளும்.. மிகவும் அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் பாலத்தை கடக்க முயல்கின்றனர்..!

தந்தை சொல்கிறார்,

” என் கையை கெட்டியமாக பிடித்துக் கொள் மா..!

ஆற்றில் தண்ணீர் நிறையப் போகிறது..!

பத்திரம் மா ” என்று…

உடனே, மகள் சொல்கிறாள்,

“அப்படினா.!

நீங்க என் கைய புடிச்சிகிங்க பா” என்று…

“இரண்டுக்கும் என்ன மா வித்தியாசம்” என்று தந்தை கேட்கிறார்..!

“நான் உங்கள் கையை பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால் கையை விட்டுப் பிரிய வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் பிடித்தால் எந்த காரணத்திற்காகவும் என் கையை விடமாட்டீர்கள் இல்லையா..? பா” என்றாள் மகள்…

உண்மை..!

அன்பு எங்கோ..?

அளவு கடந்த நம்பிக்கையும் அங்கே..!

Read Previous

பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் அடுத்த நிமிடம் தட்டு காலியாகிவும்..!!

Read Next

சிக்கனை இப்படி செய்து பாருங்கள்..!! அனைவருக்கும் புதிதான ஒரு செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular