தாய் கண்டித்ததால் விபரீதம் மாணவி தூக்கு போட்டு தற்கொலை…!!

பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டைகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜேக்கப் சுதன் கட்டிட தொழிலாளி இவருடைய மனைவி ஞான செல்வம் இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார், மகன் ஜெபராஜ் தந்தை ஜெக்கப் சுதனுடன் தூத்துக்குடி மாவட்டம் வைரவம் கிராமத்தில் வசித்து வரும் நிலையில் தாய் ஞாசெல்வத்துடன் அவரது மகள் பெட்டை குளத்தில் வசித்து வருகிறார், அவரது மகள் இடையன்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார், இவர் நேற்று முன்தினம் காலையில் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார், இதனை தாய் ஞானசெல்வம் கண்டித்து பள்ளிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார், பின்னர் ஞானசெல்வம் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்த மாணவி மன விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்த ஞான செல்வம் தனது மகள் தூக்கில் பிணமாக தூங்குவதை பார்த்து அலறினார், தகவல் அறிந்து திசையின் விளைவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்…!!

Read Previous

என்னை ராசி இல்லாது நடிக்க என்றால் நடிகை கீர்த்தி சுரேஷ்…!!

Read Next

கிராமப்புற முன்னேற்றத்தில் இந்தியாவிற்கு வழிகாட்டும் திட்டங்கள் தமிழக அரசு பெருமிதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular