ம.பி: சத்தர்பூர் மாவட்டத்தில் நடந்துள்ள தன்பாலின திருமணம் கவனத்தை ஈர்த்துள்ளது. மௌசாஹானியா என்ற கிராமத்தைச் சேர்ந்த கிராந்தி (21) என்ற பெண், அதே கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி ராய்க்வார் (24) என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது, அந்த தம்பதி தாலுகா அலுவலகத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.




