
நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு இதை நாம் முறையாக பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை. விடியற்காலை மூன்று முதல் ஐந்து மணி வரை நுரையீரல் நேரம் இந்த நேரத்தில் தியானம் மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும் .
காலை ஐந்து முதல் ஏழு வரை பெருங்குடல் நேரம் இந்த நேரத்தில் காலைகடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் ஏற்படாது. காலை ஏழு முதல் ஒன்பது வரை வயிற்றின் நேரம் இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும். காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம் வயிற்றில் விழும் உணவை செரிக்கச் செய்யும் நேரம் இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக்கூடாது .தண்ணீர் கூட குடிக்க கூடாது. காலை 11 முதல் ஒன்று வரை இதயத்தின் நேரம் இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாக பேசுதல் படபடத்தல் கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும். 1 முதல் மூன்று வரை சிறு குடல் நேரம் மிதமான சிற்றுண்டி உடன் ஓய்வு எடுக்க வேண்டும்.
பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர் நேரம் நீர் கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம். மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம் தியானம் இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது. இரவு ஏழு முதல் ஒன்பது வரை சு உணவுக்கேற்ற நேரம். இரவு 9 முதல் 11 வரை உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம் அமைதியாக உறங்கலாம். இரவு 11 முதல் ஒன்று வரை பித்தப்பை நேரம் அவசியம் உறங்க வேண்டும்.